News March 23, 2025
கனவு தொல்லை இருக்கா? அப்போ இத செய்யுங்க..

மனிதன் நிம்மதியாக இருப்பதே தூக்கத்தில்தான். ஆனால் அந்த தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு கனவுகள் வருவது வழக்கம். மன அழுத்தம் மற்றும் கவலைகள், இரவில் அதிக கனவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தூக்கத்திற்கு முன் மொபைல் போன், டிவி பார்ப்பதாலும் கனவுகள் அதிகமாக வருமாம். யோகா, தியானம் செய்வதால் மன அழுத்தம் குறைந்து கனவு தொல்லை இருக்காதாம்.. உங்களுக்கு அடிக்கடி என்ன கனவு வரும்?
Similar News
News March 25, 2025
மஞ்சள் விலை உயர்வு

மஞ்சள் இல்லாமல் நம் சமையலே இல்லை. இந்நிலையில், ஈரோடு சந்தையில் ஒரே மாதத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ₹1500 உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மாதம் வரை குவிண்டால் ₹13,500 என்று விற்பனையான மஞ்சள் விலை, தற்போது ₹15,000ஆக உயர்ந்துள்ளது. இதனால், சில்லரை சந்தையில் கிழங்கு மஞ்சள், மஞ்சள் தூள் ஆகியவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு கஷ்டம் தான்.
News March 25, 2025
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: தேதி அறிவிப்பு

கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று நிறைவடைந்தது. மொத்தம் 8.21 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில், இந்த பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 5இல் வெளியாகவுள்ளது.
News March 25, 2025
புறப்பட்ட புதன்: கெத்து காட்ட போகும் 3 ராசிகள்!

புதன் பகவான் வரும் 29ஆம் தேதி மீன ராசியில் சஞ்சரிப்பதால் 3 ராசிகளுக்கு ராஜ யோகம் அடிக்கப் போகிறது. 1) விருச்சிகம்: புதிய சொத்து வாங்குவீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்தி வரும். 2) கும்பம்: நிதி நிலைமை மேம்படும். தொட்ட காரியம் வெற்றியில் முடியும். புதிய முதலீடு லாபம் கொடுக்கும். 3) மிதுனம்: புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.