News April 1, 2024

இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்

image

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து 1822 புகார்கள் வந்ததாகவும், அதில் 1803 புகார்கள் முடித்துவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

சுபமுகூர்த்த தினம்.. கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

image

ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினமான இன்று, அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கீடு செய்யப்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பதிவு செய்ய விரும்புவோர் இந்த நன்னாளில் முந்துங்கள்.

News October 31, 2025

மலைப்பாம்புடன் பிரியங்கா சோப்ரா PHOTOS

image

லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா, தனது போட்டோஷூட்களால் ரசிகர்களை இணைப்பிலேயே வைத்துள்ளார். அந்த வகையில், மலைப்பாம்பை கழுத்தில் போட்டபடி, புன்னகையான முகத்துடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ‘நீங்க தைரியமான பொன்னு தான் அப்டின்னு ஒத்துக்குறோம் பிரியங்கா’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். உங்களுக்கு பிரியங்காவிடம் பிடித்தது என்ன?

News October 31, 2025

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

image

2021-ல் டெல்டாவில் விட்டதை, வரும் தேர்தலில் பிடிக்க அதிமுக தீவிரம் காட்டுகிறது. அதன் ஒருபகுதியாகவே, மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் நபராக சென்று EPS பார்வையிட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒருபுறம் மாற்றுக்கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் பணிகளும் நடக்கிறது. அந்த வகையில், தலைஞாயிறு மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகி செல்வி சேவியர், Ex அமைச்சர் OS மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

error: Content is protected !!