News March 22, 2025

வீட்டில் பணம் தங்காததற்கு இந்த 5 பழக்கங்களே காரணம்

image

வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களும் காரணம் என்கிறது வாஸ்து. 1)வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2)கடவுளுக்கு உணவு படைக்கும்முன் அதை ருசிக்கக் கூடாது 3)மாலையில் (சூரிய அஸ்தமனம் முன்) விளக்கேற்ற கூடாது. 4)இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5)பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.

Similar News

News March 29, 2025

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

image

மியான்மரில் இன்றும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை அடுத்தடுத்து (7.7 & 6.4) நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்களை மீட்கும் காட்சிகள் காண்போரைக் கண்கலங்க வைக்கிறது.

News March 29, 2025

புது காதலருடன் சிட்னியில் ஊர் சுற்றுகிறாரா சமந்தா?

image

சிட்னியில் சென்றுள்ள சமந்தா ஹாலிடேவை ஜாலியாக என்ஜாய் பண்ணி வருகிறார். அங்கே எடுத்த போட்டோக்களை அவர் இன்ஸ்டாவிலும் பதிவிட்டார். உடனே, இந்த போட்டோஸை எடுத்தது யார் என்ற கேள்வி நெட்டிசன்களை தொற்றியது. ஏற்கனவே அவர் பாலிவுட் இயக்குநரை டேட் செய்வதாக தகவல் வெளியானது. ‘ஒருவேள அவரா இருக்குமோ’ என கேள்வி கேட்டனர். ஆனால், சமந்தா, ‘போட்டோ எடுத்தது சிட்னி டூர் guide’ என பதிலளித்து பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.

News March 29, 2025

மீளாத துயரில் ஆழ்ந்த மியான்மர்.. 1000 பேர் மாயம்

image

மியான்மரில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த பூகம்பம் அந்நாட்டு மக்களை உலுக்கியது. சீட்டு கட்டுகளைப் போல் சரிந்த கட்டடங்களில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் நய்பிடாவ், மாண்டலே, டாங்கூ நகரங்களில் எங்குப் பார்த்தாலும் கட்டடக் குவியலாகக் காட்சியளிக்கிறது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!