News March 22, 2025
சம்மரில் பவர் கட் பிரச்னை வருமா?… அமைச்சர் விளக்கம்!

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். ஆனால், தமிழ்நாட்டில் போதுமான மின்சாரம் கையிருப்பு இருப்பதாகவும், 2030 வரை மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எங்கேயாவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்பட்டால், அதுவும் உடனடியாக சரிசெய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
கொடுக்குற காசுக்கு மட்டும் கூவுங்கோ.. அக்கறையில் Infosys

ஒரு நாளில் 9.15 மணிநேரத்தை தாண்டி வேலை பார்த்தால் எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் நுட்பத்தை Infosys கொண்டுவந்துள்ளது. ‘உங்கள் அர்ப்பணிப்பை பாராட்டுகிறோம், அதேநேரம் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது’ என்றவாறு மெயிலும் அதிக நேரம் பணி செய்பவர்களுக்கு வருகிறதாம். முன்பு, இந்தியர்கள் வாரத்துக்கு 70 மணிநேரம் பணியாற்றினால்தான் நாடு பொருளாதார வளர்ச்சியை அடையும் என அதன் நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியிருந்தார்.
News July 9, 2025
பாஜகவை விட அதிமுகவே துரோகம் செய்கிறது: கனிமொழி

2024 தேர்தலில் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு, தற்போது பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக என கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், பாஜகவை விட அதிமுகவே தமிழகத்திற்கு துரோகம் செய்வதாகவும் சாடினார். மேலும், மத்திய அரசு என்ன செய்கிறது, மாநில அரசு என்ன செய்கிறது என்றுகூட தெரியாமல் நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சிலர் வாக்கு கேட்டு வருவதாக விஜய்யை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
News July 9, 2025
கட்டுமான நலவாரியத்தின் கல்வி உதவித்தொகை உயர்வு!

கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. செவிலியர், கேட்டரிங், உணவு தயாரித்தல், சேவை உள்ளிட்ட பட்டயப் படிப்புகளுக்கு(Diploma) ஆண்டுக்கு ₹3,000 வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் முனைவர் பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு ₹15,000 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படவுள்ளன. இதனால், பல லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பயனடையும்.