News March 22, 2025

சம்மரில் பவர் கட் பிரச்னை வருமா?… அமைச்சர் விளக்கம்!

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். ஆனால், தமிழ்நாட்டில் போதுமான மின்சாரம் கையிருப்பு இருப்பதாகவும், 2030 வரை மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எங்கேயாவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்பட்டால், அதுவும் உடனடியாக சரிசெய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

Similar News

News March 25, 2025

APPLY NOW: ராணுவ கல்லூரியில் சேர வாய்ப்பு

image

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2026 ஜனவரி பருவத்திற்கான 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. மார்ச் 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்ப படிவங்களை ‘தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை 600 003’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலதிக தகவல்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்.

News March 25, 2025

தமிழ்நாட்டில் ஜனசேனா? – பவன் போடும் கணக்கு!

image

ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் தனது கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள அவர், இங்குள்ள தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை பெற பிளான் போட்டுள்ளாராம். திமுகவில் இருந்து சஸ்பெண்ட்டான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தெலுங்கு சமுதாய தலைவர்களிடம் பவன் தரப்பில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

News March 25, 2025

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் ஏலம்?

image

உங்கள் சொத்துக்களை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா? என்பதற்கு பதிலளிக்கும்படி, தேவநாதன் யாதவிற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி ₹24.50 கோடி மோசடி செய்ததாக அரசியல்வாதியான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது முதல் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2ஆவது முறையாக ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், கோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!