News March 22, 2025

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்

image

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது மார்ச் 30ம் தேதி இரவு 11.20 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, மறுநாள் காலை 8 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல் மார்ச் 31-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

Similar News

News March 25, 2025

கோவையில் பாலியல் தொழில்: 3 பேர் கைது!

image

கோவை சரவணம்பட்டி உள்ள ஒரு பியூட்டி பார்லரில், அழகிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக, சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில், காவல்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட சபீபுல்லா (53), சங்கீதா ஷர்மா (25), சோனா (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 25, 2025

கோவை மக்களே இத குடிக்காதீங்க! எச்சரிக்கை

image

கோவை மக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் தொப்பி, குடை பயன்படுத்தவும். மேலும் காலணி அணிந்து செல்ல வேண்டும். பின் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும் என கோவை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News March 25, 2025

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

image

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 45ஆவது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, செல்வம் ஐஏஎஸ், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் சிறப்பு மற்றும் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பின்னர் 4,611 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!