News March 22, 2025
தொழுகை செய்தவர்கள் மீது தாக்குதல்: 44 பேர் பலி

நைஜர் நாட்டின் ‘கொகரவ்’ பகுதியில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS குழு ஒன்றே காரணம் என தெரிவித்துள்ள அரசு, 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போது ISIS குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
Similar News
News September 10, 2025
தமிழக பள்ளிகளில் PUBLIC EXAM இந்த ஆண்டு முதல் ரத்து

மாநில கல்விக் கொள்கையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கல்வி வாரிய கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தாண்டு முதல் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்பை அமல்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10, +2 மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
News September 10, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தியது. இன்று நடந்த சூப்பர்-4 சுற்றில் பலமான தெ.கொரியாவுடன் மோதிய இந்திய அணி 4- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக வலம்வரும் இந்தியா, அடுத்து சீனாவை எதிர்கொள்கிறது. ஆசியக் கோப்பையை வென்றால் 2026 உலகக் கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதிபெறும். அட்வான்ஸ் வாழ்த்துகள்!
News September 10, 2025
SCIENCE: டாக்டர்கள் நாக்கை நீட்ட சொல்வது ஏன் தெரியுமா?

உடலில் எந்த பிரச்னை என்றாலும் அதை கண்ணாடி போல் நமது நாக்கு காட்டிவிடுமாம். உதாரணத்துக்கு, நாக்கு மஞ்சளாக இருந்தால் நீர்சத்து குறைபாடு, நாக்கின் நுனி மட்டும் சிவப்பாக இருந்தால் மன அழுத்தம், நாக்கு வெள்ளையாக இருந்தால் நோய்தொற்று, அடி நாக்கு சிவப்பாக இருந்தால் சுவாசப் பிரச்னைகள் இருப்பதாக அர்த்தமாம். இதனால்தான் ஹாஸ்பிடலுக்கு சென்றாலே நாக்கை காட்டும்படி மருத்துவர் கேட்கிறார். SHARE.