News March 22, 2025
தொழுகை செய்தவர்கள் மீது தாக்குதல்: 44 பேர் பலி

நைஜர் நாட்டின் ‘கொகரவ்’ பகுதியில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS குழு ஒன்றே காரணம் என தெரிவித்துள்ள அரசு, 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போது ISIS குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
Similar News
News March 25, 2025
‘துப்பாக்கி’ கொடுத்தவருடன் மோதும் ‘பராசக்தி’ ஹீரோ?

விஜய் அரசியலில் நுழைந்ததால் சினிமாவில் அவரது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துச் செல்லும் வகையில், கோட் படத்தில் ‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ என்ற வசனம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன், பொங்கலை ஒட்டி 2026 ஜன.9-ல் வெளியாகிறது. அதே நேரத்தில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். விஜய் உடனான மோதலை தவிர்ப்பாரா SK?
News March 25, 2025
மரண பயமா? ஹுசைனி பரிந்துரைத்த 3 புத்தகங்கள்!

எப்படிப்பட்ட வீரனும் மரணத்தைக் கண்டு பயப்படுவது உண்டு. ஆனால், கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனி, சாவை கண்டும் சிறிதும் அஞ்சாமல் இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், மரணத்தை துச்சமாக அவர் மதிக்க 3 புத்தகங்களே காரணம் என ஹுசைனி தனது கடைசி வீடியோவில் கூறுகிறார். DIE, அருண் செளரி எழுதிய PREPARING FOR DEATH, வேதியியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கி எழுதிய WHY WE DIE ஆகிய புத்தகங்கள்தான் அவை.
News March 25, 2025
APPLY NOW: ராணுவ கல்லூரியில் சேர வாய்ப்பு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2026 ஜனவரி பருவத்திற்கான 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. மார்ச் 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்ப படிவங்களை ‘தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை 600 003’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலதிக தகவல்களுக்கு <