News March 22, 2025
அரசு சொத்தை சேதம் செய்தால் என்ன தண்டனை தெரியுமா?

அரசு சொத்தை சேதப்படுத்தினால் என்ன தண்டனை அளிக்கப்படும் என BNS சட்டத்தின் 324 (3), (4), (5) ஆவது பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சொத்தை சேதப்படுத்தினால் ஓராண்டு வரை சிறை (அ) அபராதம் (அ) 2 தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும். ரூ.1 லட்சத்துக்கும் குறைவான சொத்தை சேதப்படுத்தினால் 2 ஆண்டு வரை சிறை, ரூ.1 லட்சம் சொத்தை சேதப்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 25, 2025
அந்த சீன் எல்லாம் என்கிட்ட நடக்காது…!

டெல்லி அணி நேற்றைய போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் சிக்கிக் கொண்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம், கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த KL ராகுலை, கோயங்கா வசைபாடியதுதான். ஆனால், நேற்றைய போட்டிக்குப் பிறகு பண்ட் மீது கோயங்கா கோபப்படவில்லை. இருவரும் ஜாலியாக பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
News March 25, 2025
ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், மதுரை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் 5 துணை காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 25, 2025
ஆளுநரை புகழ்ந்த பார்த்திபன்; விமர்சித்த வன்னியரசு!

நடிகர் பார்த்திபன் ஆளுநர் ஆர்.என்.ரவியை புகழ்ந்து பேசியது தவறு என விசிகவின் வன்னியரசு விமர்சித்துள்ளார். ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப் போக்கு பெருகிக் கொண்டே போகிறது. தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் அப்படிப்பட்டவர்களை தங்களை போன்ற ஆளுமைகள் புகழ்வது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.