News March 22, 2025

பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

image

18வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ரஹானே 56 ரன்களும், நரேன் 44 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு அணி தரப்பில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெல்லப் போவது யார்?

Similar News

News March 25, 2025

அந்த சீன் எல்லாம் என்கிட்ட நடக்காது…!

image

டெல்லி அணி நேற்றைய போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் சிக்கிக் கொண்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம், கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த KL ராகுலை, கோயங்கா வசைபாடியதுதான். ஆனால், நேற்றைய போட்டிக்குப் பிறகு பண்ட் மீது கோயங்கா கோபப்படவில்லை. இருவரும் ஜாலியாக பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

News March 25, 2025

ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

image

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், மதுரை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் 5 துணை காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 25, 2025

ஆளுநரை புகழ்ந்த பார்த்திபன்; விமர்சித்த வன்னியரசு!

image

நடிகர் பார்த்திபன் ஆளுநர் ஆர்.என்.ரவியை புகழ்ந்து பேசியது தவறு என விசிகவின் வன்னியரசு விமர்சித்துள்ளார். ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப் போக்கு பெருகிக் கொண்டே போகிறது. தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் அப்படிப்பட்டவர்களை தங்களை போன்ற ஆளுமைகள் புகழ்வது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!