News March 22, 2025

உயிரிழப்பை குறைத்து காட்டுவது ஏன்? ராமதாஸ்

image

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கில், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு கூறியுள்ளது தவறான தகவல் என்றும், 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் உயிரிழப்பை தடுக்க இந்த விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News March 25, 2025

தலைசிறந்த விஞ்ஞானி மரணம்: மத்திய அமைச்சர் இரங்கல்

image

நாட்டின் தலைசிறந்த விவசாய- தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ண லால் சத்தா(88) காலமானார். காய்கறி, பழங்கள் உற்பத்தியில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா வளர இவர் முக்கிய காரணமாவார். தேசிய விவசாய ஆய்வு மையத்தில் பணியாற்றினார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘நாட்டுக்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்’ எனக் குறிப்பிட்டார்.

News March 25, 2025

அந்த சீன் எல்லாம் என்கிட்ட நடக்காது…!

image

டெல்லி அணி நேற்றைய போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் சிக்கிக் கொண்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம், கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த KL ராகுலை, கோயங்கா வசைபாடியதுதான். ஆனால், நேற்றைய போட்டிக்குப் பிறகு பண்ட் மீது கோயங்கா கோபப்படவில்லை. இருவரும் ஜாலியாக பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

News March 25, 2025

ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

image

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், மதுரை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் 5 துணை காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!