News March 22, 2025
செல்போன் பார்த்தபடி சாப்பிடறீங்களா? எச்சரிக்கை

செல்போனை எந்நேரமும் கைகளில் வைத்திருப்பது வழக்கமாகி விட்டது. சிலர் சாப்பிடும்போதும் கூட, செல்போனை பார்த்தபடியே சாப்பிடுவர். இது மோசமான பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டால் ஜீரணம் சிறப்பாக இருக்கும் என்றும், போனை பார்த்தபடி சாப்பிட்டால் கவனச்சிதறல் ஏற்படும். இதனால் சத்துகுறைபாடு, உடல் பருமன் ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News March 25, 2025
அந்த சீன் எல்லாம் என்கிட்ட நடக்காது…!

டெல்லி அணி நேற்றைய போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் சிக்கிக் கொண்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம், கடந்த சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த KL ராகுலை, கோயங்கா வசைபாடியதுதான். ஆனால், நேற்றைய போட்டிக்குப் பிறகு பண்ட் மீது கோயங்கா கோபப்படவில்லை. இருவரும் ஜாலியாக பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
News March 25, 2025
ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை டிஐஜியாக சந்தோஷ் ஹதிமானி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், மதுரை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் 5 துணை காவல் ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 25, 2025
ஆளுநரை புகழ்ந்த பார்த்திபன்; விமர்சித்த வன்னியரசு!

நடிகர் பார்த்திபன் ஆளுநர் ஆர்.என்.ரவியை புகழ்ந்து பேசியது தவறு என விசிகவின் வன்னியரசு விமர்சித்துள்ளார். ஆளுநரின் தமிழர் விரோத மற்றும் தமிழ் பண்பாட்டு விரோதப் போக்கு பெருகிக் கொண்டே போகிறது. தமிழ் பண்பாட்டை அழித்தொழிக்க முயற்சிக்கும் அப்படிப்பட்டவர்களை தங்களை போன்ற ஆளுமைகள் புகழ்வது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகமில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.