News March 22, 2025
இராமநாதபுரத்தின் பெயர் காரணம் தெரியுமா?

இராமாயணத்தில் ராமன் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றபோது, இதை ஒரு முக்கிய இடமாகப் பயன்படுத்தியதாகக் கருதப்படுவது ஒரு காரணமாகும். மேலும் இது முகவை என்றும் அழைக்கப்படுகிறது. வைகையின் முகத்துவாரத்தில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. மேலும் முகவை என்றால் அள்ளுதல் என்றும் பொருள். இந்தப் பகுதி நெல் விளையும் பூமியாக இருந்ததால் கதிரடித்து நெல் அள்ளும் இடம் என்றும் பொருள்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Similar News
News September 22, 2025
ராம்நாடு: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

ராம்நாடு மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News September 22, 2025
ராம்நாடு: டாஸ்மாக் கடையில் லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு

திருப்புல்லாணி ஒன்றியம், வண்ணாங்குண்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று (செப் 21) ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், கடைக்குள் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 600 மதுப் பட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News September 22, 2025
ராம்நாடு: 53 கிணறுகள் காணவில்லை

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 1998ம் ஆண்டில் இருந்த அரசுக்கு சொந்தமான 95 கிணறுகளில் தற்போது களப்பணியாளர்களின் அறிக்கையின்படி 42 கிணறுகள் மட்டுமே உள்ளன. 53 கிணறுகளை காணவில்லை. 2007ம் ஆண்டு நகராட்சி அலுவலர்களின் கணக்கெடுப்பின்படி 42 கிணறுகளாக குறைந்துள்ளது. ஆக்கிரமிப்பால் 53 கிணறுகள் காணவில்லை. தொடர் பராமரிப்பு இல்லாமல் மேலும் கிணறுகள் குறைய வாய்ப்புள்ளது.