News March 22, 2025

திண்டிவனம் அருகே ஆடுகள் கடத்திய கும்பல் கைது

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பாங்கொளத்தூரில் விவசாயியின் 5 ஆடுகளை காரில் கடத்த முயன்ற கும்பலை பொதுமக்கள் மடக்கினர். போலீசார் விசாரணையில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 7 ஆடுகள், 2 சொகுசு கார்கள், ₹60,000 பணம், தங்க மோதிரங்கள், ₹2.13 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகள் பல்வேறு மாவட்டங்களில் திருட்டில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

Similar News

News March 26, 2025

10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

image

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க…

News March 26, 2025

முயல் வேட்டையின்போது துண்டான வாலிபர் விரல் 

image

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன் தென்பசார் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். துப்பாக்கியின் டிரிகர் பகுதி உடைந்திருப்பதை கவனிக்காமல் வெடிமருந்தினை லோடு செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அஜித்குமாரின் கட்டை விரல் துண்டானது. அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 26, 2025

கோர விபத்தில் கவிழந்த ஆட்டோ

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மூங்கிலான் (30), ரேவதி(27) தம்பதி. இவர்களது ஒரு வயது மகள் தன்விகா. மூங்கிலான் திண்டிவனத்திலிருந்து ஆட்டோவில் சாரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் வந்த  குழந்தை உட்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!