News April 1, 2024
சக கைதியை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு

புழல் மத்திய விசாரணை சிறையில், கஞ்சா வழக்கில் கைதான எண்ணூரை சேர்ந்த கார்த்திக் 23 ராஜேந்திரன் 31 அயனாவரம் லோகு 23 ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் இவரது செருப்பு காணாமல் போனதால் மற்றொரு கைதியான அமைந்த கரையை சேர்ந்த முகமது அமான் 43 என்பவர் திருடியதாக கூறி மூவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் முகமது அம்மானை தாக்கிய மூவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 19, 2025
பீக் ஹவரில் குடிநீர் லாரிகளுக்கு தடை

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ‘பீக் ஹவர்’ நேரங்களில் குடிநீர் லாரிகள் சில பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட 6 மண்டலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மண்டலங்களில் மாற்று வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லாரிகள் GPS மூலம் கண்காணிக்கப்படும். குறிப்பாக, விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
News April 19, 2025
பெண்கள் உதவி மையத்தில் வேலை

ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில், தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.10,000 – ரூ.12,000 வழங்கப்படும். பாதுகாப்பாளர் பணிக்கு பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பன்முக உதவியாளர் பணிக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த <
News April 19, 2025
3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 4 வழிச்சாலை மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, நாளை (ஏப்.20 முதல் ஏப்.22ஆம் தேதி வரை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை செல்லும் வாகனங்கள் செனட்டாப் சாலை, சேமியர்ஸ் ரோடு வழியாக சென்று நந்தனம் சந்திப்பில் இடது வலது புறம் திரும்பி தங்கள் இலக்கை சென்று அடையலாம் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்