News March 22, 2025
இலவசமாக தக்காளி வழங்கிய விவசாயி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், தக்காளி விலை கடும் சரிவால் நஷ்டம் அடைந்த விவசாயி ஒருவர் இலவசமாக தக்காளிகளை மக்களுக்கு வழங்கினார். 2 லட்சம் ரூபாய் செலவில் விளைவித்த தக்காளிக்கு வெறும் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாயிகள் பெரும் நஷ்டம் அடையாமல் இருக்க, அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 5, 2025
தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஆகஸ்ட் 8, 2025 அன்று காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
News August 4, 2025
தருமபுரி மக்களுக்கு கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தருமபுரி செந்தில்நகர், இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, காலணி, நான்கு ரோடு, குமாரசாமிபேட்டை, காரிமங்கலம், சொன்னம்பட்டி, மாறண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, கொண்டம்பட்டி, பாலக்கோடு, பாளையம், சேசம்பட்டி, கெங்காலபுரம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உங்கள் பகுதியில் மழையா?
News August 4, 2025
தர்மபுரி மக்களே! திருமணம் தடை நீங்க வேண்டுமா?

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அமைந்துள்ளது அருணாசலேஸ்வரர் கோயில். சிறு குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலுடன் இந்த கோயில் ஒப்பிடப்படுகிறது. திருமண வயதில் இருப்பவர்கள் நல்ல வரன் அமையவும், திருமணத் தடைகள் நீங்கவும் இங்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்குகின்றனர். சீக்கிரம் திருமணம் நடக்க நினைப்பவர்களுக்கு பகிருங்கள்!