News March 22, 2025

அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து உயர்வு

image

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு உச்சம் தொட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இதன் விளைவாக கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துள்ளது. மார்ச் 14 நிலவரப்படி, அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.2,600 கோடி அதிகரித்து, ரூ.56.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Similar News

News March 25, 2025

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக் கூடாது: அண்ணாமலை

image

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஜாமீன் கிடைக்க பொய் சொல்லி உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது எனவும் சாடியுள்ளார். முதல்வர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது செந்தில் பாலாஜி மீது கூறிய குற்றச்சாட்டுக்களை மறந்து அவரை அமைச்சராக தொடர வைப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 25, 2025

முகம் பளிச்சிட இதை ட்ரை பண்ணலாமே…

image

✦மசித்த பப்பாளி மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து சுமார் 15 – 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சருமம் பொலிவாகும். ✦கடலை மாவை தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் முகம் கழுவ முகம் பளிச்சிடும். ✦மசித்த வாழைப்பழம், தேன் மற்றும் பால் கலந்து பேஸ் மாஸ்க் போட நல்ல பலன் கிடைக்கும்.

News March 25, 2025

யஷ்வந்த் வர்மாக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

image

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய அம்மாவட்ட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்ற கூடாது என வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். முன்னதாக, நீதிபதி வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

error: Content is protected !!