News March 22, 2025

IPL: வரலாறு படைக்கப்போகும் அந்த 9 பேர்…!

image

ஐபிஎல் தொடர் 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீரர்களை பார்த்துவிட்டது. ஆனால், அதில் 9 பேர் மட்டுமே 18வது சீசனிலும் விளையாடுகிறார்கள். இந்த பட்டியலில், தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரும் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுவர். மீதியுள்ள ஆறு பேர் யார் தெரியுமா? ஜடேஜா, அஸ்வின், ரஹானே, மனீஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஸ்வப்னில் சிங் இவர்கள்தான் அது. 9 பேருமே இந்திய வீரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.

Similar News

News March 25, 2025

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க டிப்ஸ்

image

தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பருத்தியால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். 12PM – 4PM மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. தினமும் 4லி தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் சத்துள்ள பழங்கள், இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

News March 25, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை. ▶மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான். ▶ ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய.

News March 25, 2025

குணால் கம்ரா மீது தவறில்லை: உத்தவ் தாக்கரே

image

ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா எந்த தவறும் செய்யவில்லை என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பொதுமக்களின் கருத்தை தான் குணால் கம்ரா வெளிப்படுத்தினார் என்றும், தனிப்பட்ட ரீதியில் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்களால் குணால் கம்ராவின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சேதத்துக்கு அரசு இழப்பீடு வழங்கவும் அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!