News March 22, 2025
திமுக அரசு திணறி வருகிறது: அன்புமணி

கொலை, கொள்ளையை தடுக்க முடியாமல் திமுக அரசு திணறி வருவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 6,597 படுகொலைகள் நடைபெற்றுள்ளதாகவும், ஆனால் உண்மைக்கு மாறாக குற்றங்கள் குறைந்துள்ளதாக முதல்வர் கூறுவது முற்றிலும் தவறானது என்றும் அவர் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால், கொலைகள் குறைந்திருக்கும், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 9, 2025
தமிழகத்தில் இன்று பஸ், ஆட்டோ ஓடுகிறதா? புது அப்டேட்

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சற்று குறைந்த அளவில்(80%) அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
கணக்கு வாய்ப்பாடு.. பள்ளிகள் ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்!

6-ம் வகுப்பு மாணவர்களில் 53% பேருக்கு மட்டுமே 10-ம் வாய்ப்பாடு வரை மட்டுமே தெரிவது கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் & தனியார் என 74,229 பள்ளிகளில் 21.15 லட்சம் மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம், மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனராம். உங்கள் கருத்து என்ன?
News July 9, 2025
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக்கூடாது: CS

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.