News March 22, 2025
IPL: இன்றைய போட்டி நடக்குமா? இல்லை நடக்காதா?

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று IPL முதல் போட்டி நடக்கிறது. மழைக்கு வாய்ப்பு இருப்பதால் போட்டி பாதிக்கப்படலாம் என செய்தி வெளியாகி வந்தது. இந்நிலையில் கொல்கத்தா வானிலை மையம் தரப்பில், மழையால் இன்றைய போட்டிக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருப்பதாகவும், சூரியன் தென்படுவதாகவும் அது கூறியுள்ளது. முதல் போட்டியில் கேகேஆர், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
Similar News
News March 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 25, 2025
எளிதில் உறக்கம் வர டிப்ஸ்…!

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.
News March 25, 2025
மேட்ரிமோனி தளங்களில் புதிய மோசடி.. உஷார் மக்களே!

மேட்ரிமோனி தளங்களில் புதிய பண மோசடி நடைபெறுவதால், உஷாராக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். போலி கணக்கு மூலம் திருமண விருப்பம் தெரிவிக்கும் இக்கும்பல், மணப்பெண் (அ) மணமகனிடம் பேசி, ஆன்லைனில் முதலீடு செய்ய ஆசையை தூண்டுகின்றனர். பின் போலி இணையதளங்கள் மூலம் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, தொடர்புகளை துண்டித்துவிட்டு தப்பிவிடுகின்றனர். TNல் இதுபோல் 379 மோசடி புகார்கள் பதிவாகியுள்ளன.