News March 22, 2025

ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ரேவந்த்

image

நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி ஐதராபாத்தில் அடுத்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார். ஐதராபாத்தில் நடைபெறும் அடுத்த கூட்டத்திலும் தென்மாநில தலைவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், தொகுதி மறுவரையறை தொடர்பாக தலைவர்களாகிய நாம் மக்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 24, 2025

திமுக கூட்டணியில் விரிசலா?

image

திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து தவாக தலைவர் வேல்முருகன் பேசியிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் அவருக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வதோ, விலகுவதோ குறித்து தனித்து முடிவெடுக்க முடியாது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக முடிவெடுத்து வெளிப்படையாக அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 24, 2025

வள்ளலார் பொன்மொழிகள்

image

*உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். *பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். *உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.

News March 24, 2025

6 நாட்களுக்கு பின் கலவரம் ஓய்ந்தது

image

மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி சில அமைப்புகள் தொடங்கிய போராட்டம் பின் கலவரத்தில் முடிந்தது. குறிப்பாக நாக்பூரில் கடந்த 17-ம் தேதி பெரும் வன்முறை வெடித்தது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், முதல்வர் பட்னவிஸ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!