News March 22, 2025
மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு கூடாது: பட்நாயக்

மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டும் முக்கியமான கூட்டம் இது என ஒடிசா முன்னாள் CM நவீன்பட்நாயக் பாராட்டியுள்ளார். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றிய அவர், மாநிலங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், நாட்டில் மக்கள் தொகை பெருகியிருக்கும் என்றார். எனவே, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.
Similar News
News March 24, 2025
திருமணமான ஆண்களுக்கு மட்டும்…

கல்யாணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வதை நாம் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், அது உண்மைதான் என்கிறது போலந்து ஆய்வு. பேச்சிலர் ஆண்களைவிட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாகிறதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா? உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் வாய்ப்பு அதிகமாகும்.
News March 24, 2025
எந்த ராசிக்கு எந்தக் கல்?

ஒருவர் தனது ஜென்ம ராசிக்குரிய ரத்தினக் கல்லை ஜாதக ரீதியாக ஆராய்ந்து அணிந்து கொண்டால் நன்மைகள் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகிறது. அதன் விவரம் இதோ: ➤மேஷம் – பவளம் ➤ரிஷபம் – பச்சை ஜிர்கான் ➤மிதுனம் – மரகதம் ➤கடகம் – நீல முத்து ➤சிம்மம் – மாணிக்கம் ➤கன்னி – மரகதம் ➤துலாம் – பச்சை மணிக்கல் ➤விருச்சிகம் – செவ்வந்திக்கல் ➤தனுசு – புஷ்பராகம் ➤மகரம் – ஆம்பர் கல் ➤கும்பம் – கோமேதகம் ➤மீனம் – கனக புஷ்பராகம்.
News March 24, 2025
நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை – PK

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மனநிலை சரியில்லை என பிரசாந்த் கிஷோர்(PK) விமர்சனம் செய்துள்ளார். நிதிஷுக்கு அவரது அமைச்சரவையில் இருப்பவர்களின் பெயர்களே தெரியாது என தெரிவித்த அவர், நிதிஷ் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நிதிஷின் மனநிலை சரியில்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்கும் என்றும் PK குறிப்பிட்டார்.