News April 1, 2024
இது மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது

2030க்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறுமென்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமென டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “Great AI Debate” கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்மறையான சூழலை விட நேர்மறை சூழல் அதிகமாக இருக்குமென நம்புகிறேன்’ என்றார்.
Similar News
News October 31, 2025
திமுகவுடன் கூட்டணி… அரசியலில் புதிய பரபரப்பு

அன்புமணிக்கு பதிலாக பாமக செயல் தலைவராக நியமிக்கப்பட்ட தன் மகள் ஸ்ரீகாந்தியை, 2026 தேர்தலில் தருமபுரியில் களமிறக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராமதாஸ் உத்தரவின்பேரில், திமுகவுடன் கூட்டணி பேச்சை ஜி.கே.மணி தொடங்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் இணைந்து, 5 MLA-க்கள் வென்றாலே, கட்சியை தன் பக்கம் தக்க வைத்து விடலாம் என அவர் கணக்கு போட்டு இருக்கிறாராம்.
News October 31, 2025
ராமதாஸுக்கு திமுக அழைப்பு

அப்பா – மகன் என பிரிந்திருக்கும் பாமகவில், கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ளது. NDA கூட்டணியில் இணைய அன்புமணி விரும்புவதாகவும், DMK உடன் ராமதாஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க, பாமக சார்பில் ராமதாஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இது உள்கட்சியில் மட்டுமின்றி, திமுக கூட்டணியிலும் பேசுபொருளாகியுள்ளது.
News October 31, 2025
தேவரின் தங்க கவசம் அகற்றப்படும்: சீமான்

முத்துராமலிங்க தேவருக்கு தங்கம், வெள்ளி கவசங்களை அணிவித்து, அவரை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவராக சித்தரிக்கிறார்கள் என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானவராக வாழ்ந்தவர் தேவர் என்றும் குறிப்பிட்டார். தான் ஆட்சிக்கு வந்தால், தேவர் நினைவிடத்திலுள்ள தங்க, வெள்ளி கவசங்களை எடுத்துவிட்டு, அறக்கட்டளை தொடங்கி, அதில் வரும் நிதியை கொண்டு நலத்திட்டங்களை வழங்குவேன் என்றார்.


