News April 1, 2024
இது மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது

2030க்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறுமென்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமென டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “Great AI Debate” கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்மறையான சூழலை விட நேர்மறை சூழல் அதிகமாக இருக்குமென நம்புகிறேன்’ என்றார்.
Similar News
News April 20, 2025
சின்னத்துரை மீதான தாக்குதல்: 2 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டகிராம் மூலம் பழகியவர்கள் சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீஸ், சங்கரநாராயணன், சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளது. இதில், தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸ் தேடி வருகிறது.
News April 20, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 20- சித்திரை- 07 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:00 PM – 4:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை
News April 20, 2025
தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா

ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நாளை ( ஏப்ரல் 21 ) வரை தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டுவர முடியும் என அமெரிக்கா கூறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது.