News March 22, 2025
பள்ளி ஆசிரியை தற்கொலையில் திடுக் தகவல்

கோவை மதுக்கரை அரிசி பாளையத்தை சேர்ந்தவர் பத்மா(53). சில தினங்களுக்கு முன் இவர் அப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மகளுக்கு திருமணம் தாமதமாகி வந்தது, மகனின் எதிர்காலம் குறித்த கவலை, எதிர்பாராதவிதமாக குடும்பத்தில் ஏற்பட்ட பணச் செலவுகள் போன்ற வற்றால் மன அழுத்தத்தில் இருந்த பத்மா, மேற்கண்ட விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News March 24, 2025
தண்ணி லாரி, டிராக்டர் உரிமையாளர்கள் கவனத்திற்கு

கோவையில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க, மேல்நிலைத்தொட்டிகள் கட்டி, 24 மணி நேரமும் அரசு அனுமதிக்கும் கட்டணத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் தங்களது விபரங்கள் மற்றும் நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் விபரத்தை, cityengineer.coimbatore@gmail.com, Whatsapp No: 99440-64948 வாயிலாக தெரிவிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
News March 24, 2025
போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
News March 24, 2025
ஹெல்மெட் போட்டாதான் அனுமதி

கோவை கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழையும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கோவை அலுவலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் மனு அளிக்க இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.