News March 22, 2025
பன்முகத்தன்மையே நாட்டின் பலம்: பினராயி விஜயன்

மாநிலங்களுடன் மத்திய அரசு பேச வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். பன்முகத்தன்மையே நாட்டின் பலம். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அவசியம் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News July 11, 2025
நயன்தாராவுக்கு விவாகரத்தா? இன்ஸ்டா போட்டோவில் பதில்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி பிரிய வேண்டும் என யாருக்கு ஆசையோ தெரியவில்லை. சமீபத்தில் இந்த விவாகரத்து புரளி காட்டுத்தீயாக சோஷியல் மீடியா தொடங்கி தேசிய ஊடகங்கள் வரை பரவியது. இந்த வதந்திகளுக்கு எல்லாம் ஒன்றை போட்டோவில் நயன் பதில் அளித்துள்ளார். விக்கியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, Our reaction when we see loopy news about us என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
News July 11, 2025
மினிமம் பேலன்ஸ் இல்லையா.. BOB வங்கியில் சலுகை

சாதாரண சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் தொகை பராமரிக்கவில்லையேல் பேங்க் ஆப் பரோடா (BOB ) அபராதம் விதித்து வந்தது. இந்நிலையில், அந்த வங்கி தற்போது மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் இனி கவலை கொள்ள வேண்டாம், அபராதம் விதிக்கப்படாது என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் இது ப்ரீமியம் சேமிப்பு கணக்குகளுக்கு பொருந்தாது எனவும் BOB கூறியுள்ளது.
News July 10, 2025
கோவை குண்டுவெடிப்பு: பறிபோன 58 உயிர்கள் REWIND

1998. பிப்.14. கோவை தொடர் குண்டுவெடிப்பால் தமிழகமே அதிர்ந்து போன தினம். இந்த சம்பவத்தில் 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 58 பேர் உயிரிழந்தனர். தேர்தல் பிரசாரத்துக்கு அத்வானி கோவைக்கு வரப் போகும் சமயத்தில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர குற்றத்தில் முக்கிய குற்றவாளியான சாதிக் (எ) டெய்லர் ராஜா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், பறிபோன 58 உயிர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்?