News March 22, 2025
பன்முகத்தன்மையே நாட்டின் பலம்: பினராயி விஜயன்

மாநிலங்களுடன் மத்திய அரசு பேச வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். பன்முகத்தன்மையே நாட்டின் பலம். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அவசியம் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 14, 2025
INDvsPAK போட்டியை யாரும் பாக்காதீங்க..

INDvsPAK போட்டி இன்று நடைபெறும் சூழலில், இப்போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி வலியுறுத்தியுள்ளார். டிவியில் கூட இப்போட்டியை பார்க்காதீர்கள் என கூறிய அவர், BCCI-க்கு கொஞ்சமும் கருணை இல்லை என விமர்சித்தார். மேலும், 1- 2 வீரர்களை தவிர, மற்ற இந்திய வீரர்கள் ஏன் எதுவும் பேசவில்லை என்ற கேள்வியை எழுப்பி, அவர்கள் நாட்டிற்காக நின்றிருக்க வேண்டும் எனவும் கூறினார்.
News September 14, 2025
FLASH: சிக்கன் விலை உயர்ந்தது

நாமக்கல் மண்டலத்தில் சிக்கன் விலை இன்று(செப்.14) கிலோவுக்கு ₹6 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி 1 கிலோ ₹121-க்கு விற்பனையாகிறது. நாமக்கல்லில் ஒரு முட்டை 5 ரூபாய் 15 காசுகளுக்கும், சென்னையில் 5 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையாகிறது. சென்னையில் கறிக்கோழி உயிருடன் 1 கிலோ ₹140-க்கும், தோல் நீக்கிய கறி ₹200-க்கும் விற்பனையாகிறது. உங்கள் ஊரில் ஒரு கிலோ சிக்கன் எவ்வளவு? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 14, 2025
BREAKING: திமுகவில் நடிகருக்கு முக்கிய பொறுப்பு

திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்து MP தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதால் போஸ் வெங்கட் இப்பொறுப்புக்கு வந்துள்ளார். இதற்கு CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள போஸ் வெங்கட், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.