News March 22, 2025
தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்!

உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மார்.29 அன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2025
தேனி : ரூ.50,000 வருமானம் தரும் தொழில் ஐடியா

தேனியில் சுய தொழில் செய்ய பெண்கள் ஆர்வமாக உள்ளனர். வீட்டில் இருந்தபடியே செய்யும் தொழில்தான் காளான் வளர்ப்பு. வீட்டிலேயே குடில் அமைத்து காளான் வளர்த்து விற்பனை செய்யலாம். . அதேபோல உற்பத்தி செய்யப்பட்ட காளானிலிருந்து மதிப்புகூட்டப்பட்ட பொருட்களான காளான் மால்ட் , காளான் தோசை பொடி ,காளான் முறுக்கு போன்ற பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் மாதம் 50,000 வரை வருமானம் பெற முடியும் .
News March 25, 2025
தேனி : இதை மட்டும் சொல்ல வேண்டாம்

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது செல்போனில் வரும் OTPஐ யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் எனவும், தற்போது OTP குற்றங்கள் பெருகி வருவதால் OTP மூலம் வங்கி கணக்கிலிருந்து பணம் திருட வாய்ப்பு உள்ளது எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. வங்கி , இணையவழி குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
News March 25, 2025
தேனி மாவட்டத்தில் புதிதாக 17 மினி பஸ்கள் இயக்க அனுமதி

தேனி மாவட்டத்தில் 35 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, அந்த வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்க பிப்.13.ல் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் 35 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரிசீலனை செய்து, கலெக்டர் ரஞ்சித்சிங்கின் ஒப்புதல் பெற்று 17 புதிய வழித்தடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.