News March 22, 2025
ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டத்தில் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகத்தில் 8 – 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தொகுதிகள் குறைந்தால் நமது பண்பாடு, அடையாளம், முன்னேற்றம், சமூக நீதி ஆபத்தை சந்திக்கும். மாணவர்கள், பெண்களின் வளர்ச்சி தடைபடும். இந்திய ஜனநாயகத்தையும், கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்புதான் இது என்றார்.
Similar News
News March 24, 2025
எந்த ராசிக்கு எந்தக் கல்?

ஒருவர் தனது ஜென்ம ராசிக்குரிய ரத்தினக் கல்லை ஜாதக ரீதியாக ஆராய்ந்து அணிந்து கொண்டால் நன்மைகள் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகிறது. அதன் விவரம் இதோ: ➤மேஷம் – பவளம் ➤ரிஷபம் – பச்சை ஜிர்கான் ➤மிதுனம் – மரகதம் ➤கடகம் – நீல முத்து ➤சிம்மம் – மாணிக்கம் ➤கன்னி – மரகதம் ➤துலாம் – பச்சை மணிக்கல் ➤விருச்சிகம் – செவ்வந்திக்கல் ➤தனுசு – புஷ்பராகம் ➤மகரம் – ஆம்பர் கல் ➤கும்பம் – கோமேதகம் ➤மீனம் – கனக புஷ்பராகம்.
News March 24, 2025
நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை – PK

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மனநிலை சரியில்லை என பிரசாந்த் கிஷோர்(PK) விமர்சனம் செய்துள்ளார். நிதிஷுக்கு அவரது அமைச்சரவையில் இருப்பவர்களின் பெயர்களே தெரியாது என தெரிவித்த அவர், நிதிஷ் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நிதிஷின் மனநிலை சரியில்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்கும் என்றும் PK குறிப்பிட்டார்.
News March 24, 2025
மாணவி கூட்டு பலாத்காரம்.. 4 கொடூரர்கள் கைது

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூரில் கல்லூரி மாணவி வீடு திரும்பும் போது 4 பேர் பின் தொடர்ந்துள்ளனர். திடீரென மாணவியை வாயை பொத்தி தூக்கிச் சென்றனர். மறைவான இடத்தில் வைத்து 4 பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவி நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வீடு சென்றார். மாணவியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைதாகியுள்ளனர்.