News March 22, 2025
கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டதால், கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. தஞ்சை காசாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் (40) கடந்த 13ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். ஆனால், பிரகாஷை மனைவி நாகலட்சுமியும், அவரது கள்ளக்காதலன் வீரக்குமாரும் சேர்ந்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.
Similar News
News July 10, 2025
மகளிர் உரிமை திட்ட விதிகள் தளர்வு.. உதயநிதி தகவல்

மகளிர் உரிமைத் திட்ட விதிகளை CM ஸ்டாலின் தளர்த்தியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், கடந்த 22 மாதங்களாக
1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும், இந்த திட்டத்தில் இன்னும் புதிதாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் உதயநிதி கூறினார்.
News July 10, 2025
தவெகவில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்..!

சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தின் வாக்குகளை தவெகவால் பெற முடியாது என அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்.
News July 10, 2025
இரவு இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடுமாம். அதேபோல் சேலம் மற்றும் தருமபுரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?