News March 22, 2025
இனி மாநில மொழிகளில் தொடர்பு: அமித்ஷா அதிரடி

மும்மொழிக்கொள்கை தொடர்பான சர்ச்சை அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு இந்திய மொழியும் நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் என அமித்ஷா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் பேசிய அவர், இந்தி எந்த மொழிக்கும் போட்டியில்லை என்றார். மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அனைத்து முதல்வர்கள், எம்.பிக்கள், பொதுமக்களுடனான கடிதத் தொடர்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 23, 2025
நள்ளிரவில் திமுக நிர்வாகி கொடூர கொலை

மதுரையில் நள்ளிரவில் திமுக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மதுரை தனக்கன்குளம் பகுதியில் முன்னாள் திமுக மண்டலத் தலைவர் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை, ஓட ஓட பல இடங்களில் அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இதனையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
News March 23, 2025
தமிழன் ‘தமிழ்நாட்டை’ உருவாக்கவில்லை: சிபிஆர்

தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது; எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை என்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள், அதைப் பின்பற்றினர்; இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக கொந்தளிக்கும் நெட்டிசன்கள், வரலாற்றை சிபிஆர் திரித்து சொல்வதாக விமர்சிக்கின்றனர்.
News March 23, 2025
கிரிக்கெட் ரசிகர்கள் Safetyக்கு ‘சென்னை சிங்கம்’

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் CSK – MI இடையே நடக்கும் எல் கிளாசிக்கோ போட்டியை காண திரளான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரசிகர்களின் பாதுகாப்புக்காக ‘சென்னை சிங்கம் IPL QR-CODE’ என்ற நவீன வசதியை சென்னை போலீஸ் அறிமுகம் செய்திருக்கிறது. ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், இந்த QR-CODE மூலம் மக்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்கலாம்.