News March 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 214
▶குறள்: ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
▶பொருள்: ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
Similar News
News September 14, 2025
பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

+1, +2 மாணவர்களுக்கு செப்.10 முதல் காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு நாளை முதல் 26-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, செப்.27 – அக்.5 வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இதனையொட்டி, ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. பயணத்தை சரியாக திட்டமிடுங்கள் நண்பர்களே! SHARE IT.
News September 14, 2025
வடிவேலுவை விட விஜய்க்கு கூட்டம் குறைவு: ரகுபதி

திருச்சியில் நடந்த விஜய்யின் சுற்றுப்பயணத்தின் போது பொது சொத்துக்கள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ரகுபதி, சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வசதிக்காக வார விடுமுறையில் மட்டுமே விஜய் பிரசாரம் செய்கிறார் எனக் கூறிய அவர், 2011ல் திமுகவை ஆதரித்து வடிவேலு பிரசாரம் செய்யும்போது, விஜய்க்கு வந்ததை விட அதிக கூட்டம் வந்ததாகவும் தெரிவித்தார்.
News September 14, 2025
சற்றுமுன்: இபிஎஸ் உடன் மீண்டும் இணைந்தனர்

OPS ஆதாரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் EPS தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிறுவலூர் மாரப்பன் கூறுகையில், செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்தவரை தங்களை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை; இதனால் தான் ஓபிஎஸ் தலைமையை ஏற்று சென்றோம். தற்போது அதிமுக பொறுப்பிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதால், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.