News March 22, 2025

ரூ.58 கோடி… பரிசுத் தொகையை பங்கு போடுவது எப்படி?

image

சாம்பியன் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு வீரருக்கும், தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கும் தலா ரூ.3 கோடி வழங்கப்பட உள்ளது. பிற பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிசிசிஐ அதிகாரிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News March 24, 2025

நிதிஷ் குமாருக்கு மனநிலை சரியில்லை – PK

image

பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேசிய கீதத்தை அவமதித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரது மனநிலை சரியில்லை என பிரசாந்த் கிஷோர்(PK) விமர்சனம் செய்துள்ளார். நிதிஷுக்கு அவரது அமைச்சரவையில் இருப்பவர்களின் பெயர்களே தெரியாது என தெரிவித்த அவர், நிதிஷ் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். நிதிஷின் மனநிலை சரியில்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்கும் என்றும் PK குறிப்பிட்டார்.

News March 24, 2025

மாணவி கூட்டு பலாத்காரம்.. 4 கொடூரர்கள் கைது

image

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூரில் கல்லூரி மாணவி வீடு திரும்பும் போது 4 பேர் பின் தொடர்ந்துள்ளனர். திடீரென மாணவியை வாயை பொத்தி தூக்கிச் சென்றனர். மறைவான இடத்தில் வைத்து 4 பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவி நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வீடு சென்றார். மாணவியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைதாகியுள்ளனர்.

News March 24, 2025

விவசாயிகளுக்கு ₹6,000: மார்ச் 31க்குள் விண்ணப்பிக்கவும்

image

விவசாயிகள் அடையாள எண் பெற மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. விவசாயிகள் தனி அடையாள எண் பெறாவிட்டால், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ₹6,000 பெற முடியாது என கூறியுள்ளது. ஏற்கெனவே, PM கிசான் திட்டத்தில் இப்போது இணைந்தாலும், உதவித் தொகை வழங்கப்படும் என்றும், தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்குமாறும் மத்திய அரசும் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!