News March 22, 2025

பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும்

image

மார்ச் மாதம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை கிடையாது, வழக்கம் பாேல செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 3 வாரங்களும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டன. அதன்படி, நாளையும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். பத்திரப்பதிவும் வழக்கம் போல நடைபெறும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

Similar News

News September 15, 2025

விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் 3 தலைவர்கள்?

image

தொலைபேசி மூலம் சமாதானம் செய்த நயினாரிடம் <<17709574>>OPS<<>> பிடிகொடுக்காமல் பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், TVK உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் பதிலளித்துள்ளார். ஏற்கெனவே விஜய் தலைமையில் கூட்டணி அமையும் என டிடிவியும் கூறியிருந்தார். இதனால், OPS, TTV, செங்கோட்டையன் இணைந்து, விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

News September 15, 2025

முதல்வரிடம் மக்கள் கொடுத்த 9,391 மனுக்களின் நிலை என்ன?

image

மாவட்டங்களில் நடந்த ஆய்வு கூட்டங்களில், முதல்வரிடம் பொதுமக்கள் நேரடியாக கொடுத்த 9,391 மனுக்களில், இதுவரை 255 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மனுக்களுக்கு தீர்வு காண உயரதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், 5,570 மனுக்கள் தொடர்பான பணிகள் வகைப்படுத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

News September 15, 2025

ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கான்னு தெரியணுமா?

image

வெளியூர்களுக்கு செல்லும் போது ஹோட்டல்களில் தங்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அப்படி தங்கியிருக்கும் அறையில் ஏதாவது கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்குமா என்ற ஒருவித பயத்துடனே தங்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த முறை ஹோட்டல் அறையில் தங்க நேரும் போது அந்த அறை பாதுகாப்பானதா என்பதை சில டிரிக்குகள் மூலம் அறிந்துகொள்ளலாம். டிரிக்குகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேலே Swipe செய்து பாருங்கள்.

error: Content is protected !!