News March 22, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் (இணைய வழி மோசடி) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் தெரிவித்தாா். பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக 1930 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைப்பேசி திருட்டுகள் நடைபெற்றால் இணையத்தில் கைப்பேசி எண்ணை கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News

News September 7, 2025

நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு !

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

வியாபார தடையை நீக்கும் பஞ்சமுக விநாயகர்

image

நாமக்கல், பரமத்தி வேலூரின் மையப்பகுதியில் 1992ம் ஆண்டு கட்டப்பட்ட பஞ்சமுக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் ஆன 12 அடி உயர சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு 5 முகங்களுடன் கூடிய விநாயகர் பஞ்சமுக விநாயகராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருமணத் தடை (ம) தொழில் தடை இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து தேங்காயில் விளக்கு ஏற்றி பிராத்தனை செய்துக் கொண்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.

News September 7, 2025

நாமக்கல்: PHONE காணவில்லையா உடனே செய்யுங்க!

image

நாமக்கல் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இந்த<<>> இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!