News March 21, 2025
தமிழகத்தில் 3.60 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்து

முறைகேடுகளை தவிர்த்து, ரேஷன் பொருள்கள் உரிய நபர்களை சென்றடைவதை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, 2019-2023 வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 2.18 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 3.60 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
கன்னி பேச்சு மூலம் கவனம் ஈர்த்த ராமதாஸ் மகள்

ஓசூரில் நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் மகள் காந்திமதி முதல்முறையாக உரையாற்றியுள்ளார். எனது தந்தை ராமதாஸ் துணிச்சலுக்கும், தியாகத்துக்கும் உதாரணமானவர். அவருக்கு துணையாக நிற்பது எனது கடமை. அவரது தலைமையிலும், வழிகாட்டுதலிலும் பாமக மாபெரும் சக்தியாக மாறியுள்ளது. ராமதாஸின் ஒற்றைத் தலைமையை ஏற்று, ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பிரபல நடிகர்

சிரஞ்சீவி, கமலுடன் தவெக தலைவர் விஜய்யை ஒப்பிட்டு விமர்சனம் செய்வது நல்லது அல்ல என்று அவருக்கு ஆதரவாக இயக்குநரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா களமிறங்கியுள்ளார். பல ஊர்கள் சென்று வருவதன் அடிப்படையில் அழுத்தமாக சொல்கிறேன்; விஜய்யை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். வரலாற்றின் வேலை துணிந்தவனை தலைவனாக்குவது தான் எனக் கூறிய அவர், விஜய் வரவு அரசியலில் ஒரு அதிர்வு என்பதே உண்மை என்று தெரிவித்துள்ளார்.
News September 15, 2025
இந்தியர் கொலைக்கு பைடன்தான் காரணம்: டிரம்ப்

USA-ல் இந்தியரான சந்திரமௌலி நாகமல்லையா கொலை செய்யப்பட்டதற்கு ஜோ பைடனின் கையாளாகாத ஆட்சிதான் காரணம் என டிரம்ப் சாடியுள்ளார். பைடன் ஆட்சியில் கியூபாவிலிருந்து சட்டவிரோதமாக நுழைந்தவர்தான் இக்கொலையை செய்ததாகவும், தன்னுடைய ஆட்சியில் USA மீண்டும் பாதுகாப்பானதாக மாறும் எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், கைதான நபருக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.