News March 21, 2025

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: ஜூன் 30 வரை அவகாசம்

image

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வருகிற ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்தத் திட்டத்தில் சேரும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் உறுதியாகும். அதேபோல் பென்ஷன் முதிர்வு தொகையும் மிகப்பெரிய தொகை வழங்கப்படும். தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஒருவர், இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதற்கு மத்திய அரசு ஜூன் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.

Similar News

News July 10, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹160 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூலை 10) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,020-க்கும், சவரன் ₹72,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹480 குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹120-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,20,000-க்கும் விற்பனையாகிறது.

News July 10, 2025

BREAKING: காலையில் குலுங்கிய தலைநகரம்!

image

தலைநகர் டெல்லியில் காலை சரியாக 9.04 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் ரோத்தக் என்ற பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், மீரட் போன்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், பெரிய சேதங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

News July 10, 2025

சோழர் காலத்திலும்.. இபிஎஸ்-க்கு சேகர்பாபு பதிலடி

image

இந்து சமய அறநிலையத்துறை (HRCE) கல்லூரிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களே பயில்வதாக சேகர்பாபு கூறியுள்ளார். பக்தர்களின் காணிக்கையைக் கொண்டு கல்லூரிகள் கட்டுவதா என இபிஎஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இதற்கு பதிலளித்த அமைச்சர், சோழர்கள் காலத்தில் கூட கோயில் சார்பில் கல்விச்சாலைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 4 HRCE கல்லூரிகள் தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!