News March 21, 2025
சிக்னல் கோளாறு: புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறநகர் செல்லும் ரயில்கள் தாமதமான காரணத்தால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் சிக்னல் காரணமாக நடுவழியில் நிற்பதால், புறநகர் ரயில் சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பணி முடிந்து வீடு திரும்ப முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Similar News
News July 10, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்: அன்புமணி

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஊரை ஏமாற்றும் திட்டம் என்று அன்புமணி விமர்சித்துள்ளார். பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களே இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், அதனுடன் மகளிர் உரிமைத்தொகையைச் சேர்த்து ஏமாற்றுவதாகவும் சாடியுள்ளார். எனவே, இவ்வாறு ஏமாற்றுவதை விடுத்து, சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
News July 10, 2025
தொடர் அலட்சியத்தால் நேர்ந்த பெருந்துயரம்..!

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேலை நேரத்தில் பலமுறை தூங்கியதும், பலமுறை விபத்து தவிர்க்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பங்கஜின் சோம்பேறித்தனத்தால் பிஞ்சுகள் உதிர்ந்து போனது பெரும் வேதனை.
News July 10, 2025
இன்று மாலை 3:30 மணிக்கு…

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதுவரை இந்த மைதானத்தில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில், 3-ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. பும்ரா, ஆர்ச்சர் இன்று களமிறங்குவார்கள் எனக் கூறப்படும் நிலையில், பவுலிங் அனல் பறக்கும். இந்த டெஸ்டில் எந்த இந்திய வீரர் சதமடிப்பார் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். வெல்லப்போவது யார்?