News March 21, 2025

திருட்டு பணத்தை மறைக்க உதவினால் என்ன தண்டனை?

image

கொள்ளையர் தாங்கள் காெள்ளையடித்த பணம், நகையை உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து வைத்திருப்பர். இதில் கொள்ளையர் கைதாகும் போது, உதவியவர்களும் போலீசிடம் பிடிபடுவர். இவர்களுக்கும் BNS சட்டத்தில் தண்டனை தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர் அளிக்கும் அசையும், அசையா சொத்துகளை மறைத்து வைப்போருக்கு 3-10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 10, 2025

சோஷியல் மீடியாக்களை தடை செய்த நாடுகள் பட்டியல்

image

சமூக வலைதளங்களை தடை செய்ததற்கு எதிரான போராட்டம், அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலக காரணமாக இருந்ததை நேபாளத்தில் நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில், இதுபோன்ற தடைகள் இதற்கு முன்பும் சில நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில நாடுகளில் தடை இன்னும் அமலிலே உள்ளது. அப்படிப்பட்ட நாடுகள் எவை, எதற்காக தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மேலே உள்ள படங்களில் பார்க்கலாம்.

News September 10, 2025

டைம் ஓவர்.. அன்புமணி மீது பாயவுள்ள நடவடிக்கை?

image

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் விதித்த கெடு இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு வழங்கியும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருப்பதால் ராமதாஸ் உச்சக்கட்ட டென்ஷனில் இருக்கிறாராம். இதனால், அவர் மீது தற்காலிக பொறுப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

News September 10, 2025

BREAKING: தங்கம் விலை.. நிம்மதியான செய்தி

image

கடந்த சில நாள்களாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 2 நாளில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,160 உயர்ந்தது. இதனால், இன்றும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹10,150-க்கும், 1 சவரன் ₹81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!