News March 21, 2025
மாணாக்கர்கள் கல்வியை தொடர்வதற்கு உதவித்தொகை

திருவண்ணாமலை மாவட்டத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துஅரசு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள்தங்களது கல்வியை தொடர்வதற்கு ரூ.50,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சட்டம்வேளாண்மை, அரசின் ஒற்றைச் சாளர முறையில்(கவுன்சிலிங்) கல்லூரிச் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 18, 2025
தீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில்

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உக்கலில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க
News April 18, 2025
இலவச கல்வி; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்களுக்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும். தேவையான ஆவணங்கள்: வருமானச் சான்றிதழ், இருப்பிடம் சான்றிதழ், சாதிச் சான்றிதழ். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. rte.tnschools.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News April 18, 2025
இலவச கோடை கால விளையாட்டுப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. ஏப்.24 -ஆம் தேதிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் 2 புகைப்படம் ஆகியவற்றை நேரில் கொண்டு பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் அலுவலரை 7401703484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.