News April 1, 2024

அந்தர் பல்டி அடிக்கும் ஜெய்சங்கர்

image

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் பேசுகையில், ‘2015இல் தகவல் அறியும் விண்ணப்பத்தில் தான் அளித்த பதிலை ஜெய்சங்கர் படித்து பார்க்க வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015இல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சரி எனக் கூறியிருந்தார். இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்?’ கேள்வி வினவியுள்ளார்.

Similar News

News November 9, 2025

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

image

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News November 9, 2025

3 முறைக்கு மேல் Oil-ஐ யூஸ் பண்ணால் ₹1 லட்சம் அபராதம்!

image

Chat உணவுகள் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், பல இடங்களிலும் இந்த Chat உணவுகளை தயாரிக்க, ஒரே எண்ணெய்யை பலமுறைக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அது உடல்நலத்திற்கு பல தீமைகள் ஏற்படுத்துகிறது. இதனால், கடைகளில் இப்படி பயன்படுத்தும் எண்ணெய்களை 3 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டத்தை கேரள அரசு கொண்டுவந்துள்ளது. நல்ல சட்டம்.. நம்மூரிலும் கொண்டுவரலாம் அல்லவா?

News November 9, 2025

பும்ராவை சமாளிப்பது கடினம் இல்லை: அஸ்வின்

image

2026 T20 WC-ல் இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை தடுக்க, அணியின் திறமையான வீரர்களான அபிஷேக் சர்மா & வருண் சக்கரவர்த்தியை வீழ்த்துவது எப்படி என எதிரணிகள் திட்டம் போடுவார்கள் என கூறியுள்ளார். இதுவரை பும்ராவை சமாளிப்பதுதான் கடினம் என கூறி வந்த அவர், எதிரணியினர் அதற்கான வழியை கண்டுபிடித்துவிட்டதால் பும்ரா பிரச்னையாக இருக்கமாட்டார் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!