News March 21, 2025
மர்ம நபர்கள் தீவைப்பு: 500 ஆடுகள் பரிதாபமாக பலி

ஆந்திராவில் மர்ம நபர்கள் கொட்டகைக்கு தீ வைத்ததில் 500 ஆடுகள் பலியாகின. வாரங்கலைச் சேர்ந்த துக்கிராலா லட்சுமண் தனது ஆடுகளை, கொட்டகையில் இரவு அடைத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் கொட்டகைக்கு தீ வைத்தனர். இதில் கொட்டகையில் இருந்த 500 ஆடுகள் உடல்கருகி பலியாகின. என்ன தான் விலங்குகளாக இருந்தாலும், அவையும் உயிர்கள் தானே? தீவைத்த மனிதர்களை என்னவென்று சொல்வது?
Similar News
News July 8, 2025
பாரத் பந்த்… பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்குமா?

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அதில், தமிழகத்திலும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இரவுக்குள் வெளியாகுமா?
News July 8, 2025
2-வது டெஸ்டிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி

2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா கேப்டன் முல்டரின்(367) முச்சதத்தால் 626 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா டிக்ளேர் செய்ததால் களமிறங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 220 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
News July 8, 2025
இசையமைப்பாளர் கீரவாணி தந்தை காலமானார்

AR ரஹ்மானுக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி. இவரின் தந்தையும், பாடலாசிரியருமான சிவ சக்தி தத்தா(83) வயது மூப்பால் காலமானார். தனது கவித்துவமான வரிகளை கொண்டு பாகுபலி, RRR உள்பட பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களை அவர் எழுதியுள்ளார். சிவ சக்தி தத்தா மறைவுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP