News March 21, 2025

கோவை ரயில்வே பயணிகள் கவனத்திற்கு

image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக, திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் இடையே, வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் வடக்கு – ஷாலிமார் ரயில் 28.03.2025 மற்றும் 04.04.2025 ஆகிய தேதிகளில், 4.20 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 13.40 மணிக்கு ஷாலிமாரை சென்றடையும் என ரயில்வே துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Similar News

News September 21, 2025

கோவை: நீரில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

image

மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் தடுப்பணை பகுதியில், ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஆம்புலன்ஸ் உதவியுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 21, 2025

கோவை மக்களே: வியாபாரம் செய்ய வங்கி கடன்!

image

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 22.09.2025 முதல் 26.09.2025 வரை சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் முகாம் நடைபெறுகிறது. ரூ.15,000 கடன் பெற புதிதாக விண்ணப்பிப்போரும், முன்பு விண்ணப்பித்து கடன் பெறாதவர்களும் ஆதார், வியாபாரிகள் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உடன் கலந்து கொள்ளலாம் என கோவை மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News September 21, 2025

கோவை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கோவையில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!