News March 21, 2025
IPL 2025 திருவிழா நாளை தொடக்கம்

IPL 2025ஆம் ஆண்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க நாள் விழாவை கேகேஆர் அணி நிர்வாகம் நாளை மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துகிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் போட்டித் தொடங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ், ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.
Similar News
News March 29, 2025
இதுதான் மிக வேகமான அரைசதம்

முதல் ஒருநாள் போட்டியிலேயே மிக வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் முகமது அபாஸ் பெற்றிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், அவர் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவரான முகமது அபாசுக்கு வெறும் 21 வயதுதான் ஆகிறது. முன்னதாக, இந்தியாவின் க்ருனால் பாண்டியா (26 பந்துகள்) இந்த சாதனையை தன்வசம் கொண்டிருந்தார்.
News March 29, 2025
மியான்மரில் மீண்டும் நில நடுக்கம்

நிலநடுக்கத்தால் மியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இன்று மாலை அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தங்குமிடம், உடைமைகளை இழந்து சாலைகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முதல் அடுத்தடுத்து அங்கு நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியில் உள்ளனர். இருப்பினும், இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் துரித கதியில் நடக்கின்றன.
News March 29, 2025
கோயில்களில் சாதி பெயருடன் விழா கூடாது – ஐகோர்ட்

கோயில் திருவிழாக்களில் சாதி பெயரால் ஏற்படும் மோதல்கள் ஏராளம். இதனை தடுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, கோயில்களில் திருவிழா நடத்த ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் ஒதுக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள், ஊர் மக்கள் என்ற அடிப்படையில் விழா நடத்த அனுமதிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.