News March 21, 2025
அதிகாரமிக்கவர்களுக்கு தனி நீதியா?

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் <<15836861>>₹100 கோடிக்கும்<<>> அதிகமாக பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்து கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. இதுவே சாதாரண மக்களாக இருந்தால், பணமோசடி வழக்குப் போட்டு சிறையில் தள்ளப்படுவர். ஆனால், நீதிபதிகளாக இருந்தால் வேறு கோர்ட்டுக்கு மாற்றப்படுவார்கள். இது எப்படி நீதியாகும் என்று கேட்கின்றனர் நெட்டிசன்கள்.
Similar News
News September 15, 2025
BREAKING: 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாற்றம்

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு CBSE பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி 75% வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும். மாதாந்திர தேர்வு, செயல்முறை தேர்வு, வருகைப் பதிவு ஆகியவை உள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பள்ளியின் உள் மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News September 15, 2025
Beauty Tips: முகத்துக்கு ஐஸ் ஃபேஷியல் நல்லதா?

ஐஸ் க்யூப்களை முகத்தில் ஒத்தடம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்தும்போது 3 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ➤நேரடியாக சருமத்தில் ஐஸ்சை வைக்காமல், ஒரு துணியில் சுற்றி ஒத்தடம் கொடுப்பது நல்லது ➤சிலருக்கு ஐஸ் ஒத்தடம் ஒத்துப்போகாது, டாக்டரின் ஒப்புதலுடன் பயன்படுத்தலாம் ➤வெறும் தண்ணீர் நிறைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். SHARE.
News September 15, 2025
50% வரிவிதிப்பு குறையுமா? நாளை பேச்சுவார்த்தை

USA-வின் 50% வரிவிதிப்பு, இந்திய வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. இதனிடையே, வர்த்தகம் பற்றி இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், USA-வின் தலைமை பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரெண்டன் லின்ச், இன்று இரவு இந்தியா வரவுள்ளார். நாளை இந்தியா – USA இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வரி விதிப்பில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.