News March 21, 2025
நடிப்புத் தொழிலில் இருந்து ஸ்ரீ கோபிகா விலகல்

நடிப்புத் தொழிலில் இருந்து முழுவதும் விலகுவதாக புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஸ்ரீ கோபிகா அறிவித்துள்ளார். சன்டிவியில் வெளியான ‘சுந்தரி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ கோபிகா. இதையடுத்து, சூர்யா டிவியில் ‘மாங்கல்யம் தந்நுனானே’ சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்தும், நடிப்புத் தொழிலில் இருந்தும் விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ கோபிகா பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 31, 2025
CSKவின் மிக மோசமான ரெக்கார்ட்

2019 முதல், CSK அணி ஒரு முறைகூட 180 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததில்லை. இதுவரை, அணி தனது 9 சேசிங்கில், அனைத்துமே தோல்விதான். இப்படியான ரெக்கார்ட்டை வேறெந்த அணியும் செய்திடவில்லை. ஒட்டுமொத்தமாக, IPL வரலாற்றில், CSK 180 அல்லது அதற்கு அதிகமான ரன்களை 27 முறை மேல் சேசிங் செய்து, அவற்றில் 15ல் வெற்றி பெற்றுள்ளது. இவற்றில், 13 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 31, 2025
கோயிலுக்குச் சென்ற பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

தெலங்கானா மாநிலம் ஓர்கொண்டா அருகே கோயிலுக்கு சென்ற திருமணமான பெண்ணை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. உறவினர்களுடன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றுவிட்டு குட்டா பகுதிக்கு திரும்பியபோது வழிமறித்த கும்பல், உறவினர்களை கடுமையாகத் தாக்கிவிட்டு பெண்ணின் கைகளைக் கட்டி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது. 6 பேர் சிக்கிய நிலையில், இருவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
News March 31, 2025
எனது மகனை பலிகிடா ஆக்குகின்றனர்

L2 எம்புரான் பட கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதில், <<15942114>>மோகன்லாலுக்கு <<>>ஆதரவாக இயக்குநர் மேஜர் ரவி பதிவிட்டார். இதனால், பிருத்விராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட, அவரின் தாயார் பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது மகனை பலிகிடா ஆக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். ஒரு இயக்குனராக, பிருத்விராஜ் படத்தில் தொடர்புடைய யாரையும் ஏமாற்றவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.