News March 21, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

image

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக ஐகோர்ட் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பிஹார், தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Similar News

News September 15, 2025

பாமகவின் தலைவர் அன்புமணி இல்லை: MLA அருள்

image

<<17715168>>தேர்தல் ஆணைய கடிதத்தில் <<>>எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என குறிப்பிடப்படவில்லை என்று MLA அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.பாலு திட்டமிட்டு பொய்யை பரப்பி வருவதாகவும், அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் ராமதாஸுக்கு தடை விதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

News September 15, 2025

BREAKING: 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாற்றம்

image

பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு CBSE பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி 75% வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும். மாதாந்திர தேர்வு, செயல்முறை தேர்வு, வருகைப் பதிவு ஆகியவை உள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பள்ளியின் உள் மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News September 15, 2025

Beauty Tips: முகத்துக்கு ஐஸ் ஃபேஷியல் நல்லதா?

image

ஐஸ் க்யூப்களை முகத்தில் ஒத்தடம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்தும்போது 3 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ➤நேரடியாக சருமத்தில் ஐஸ்சை வைக்காமல், ஒரு துணியில் சுற்றி ஒத்தடம் கொடுப்பது நல்லது ➤சிலருக்கு ஐஸ் ஒத்தடம் ஒத்துப்போகாது, டாக்டரின் ஒப்புதலுடன் பயன்படுத்தலாம் ➤வெறும் தண்ணீர் நிறைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். SHARE.

error: Content is protected !!