News March 21, 2025

மனித உரிமை செயற்பாட்டாளர் ‘கடல முகமது’ காலமானார்

image

தமிழகத்தையே அதிரவைத்த கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில், பிடிபி இயக்கத் தலைவர் மதானிக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டவர் கேரளாவை சேர்ந்த முன்னாள் நக்சலைட்டான கடல முகமது(79). போலீஸ் அவரை எவ்வளவு சித்ரவதை செய்தபோதும், பொய்சாட்சி சொல்ல மறுத்து, 9 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என விடுதலையானார். நேர்மைக்கும், துணிவுக்கும் சமூக செயற்பாட்டாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவர் காலமானார். RIP!

Similar News

News July 8, 2025

பெண்களுக்கு அரசு வேலைகளில் 35% இட ஒதுக்கீடு!

image

அனைத்து அரசு துறை பணிகளிலும் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அவர் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க & அதற்கான பயிற்சியை கொடுக்க பிஹார் யூத் கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

பள்ளி வேன் விபத்து… அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம்

image

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே கேட்டை வேன் ஒட்டுநர் அலட்சியமாக கடந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கு பிறகும் கேட் கீப்பர் வெளியே வரவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அலட்சியத்தால் 3 மாணவர்கள் பலியானது பெரும் சோகம்.

News July 8, 2025

அன்புமணியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தனது மகள் காந்திமதியை, ராமதாஸ் மேடையில் அமர வைத்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!