News April 1, 2024

தி.மலை: ரேண்டமைஸேன் செய்யும் பணி

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலர கூட்டரங்கில் 2024 மக்களவை தேர்தலையொட்டி  தி.மலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளுக்கு கூடுதலாக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ரேண்டமைஸேன் செய்யும் பணி இன்று (01.04.24) ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Similar News

News August 15, 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஆயுள் தண்டனை

image

கீழ்பென்னாத்தூர் அருகே கார்ணம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (20), 2020-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை நடத்திய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா, ஆகஸ்ட் 14 நேற்று அவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

News August 15, 2025

தி.மலை வரலாற்று சின்னங்கள்- இத மிஸ் பண்ணிராதீங்க

image

தி.மலை மாவட்டத்தில் உள்ள வரலாற்று சின்னங்கள் சிலவற்றை தொகுத்துள்ளோம். 1.சீயமங்கல குடைவரைக் கோவில், 2.வந்தவாசி துறைமுகம், 3.வேட்டவலம் ஜமீன் அரண்மனை, 4.கூழமந்தல் சோழிஸ்வரர் கோவில், 5.ஜமுனாமரத்தூர் பெருங்கல்குகை, 6.ஆரணி ஜாகிர் ராணி அரண்மனை, 7.காந்தியை சிறைவைத்த தூசி காவல்நிலையம், 8.மாமண்டூர் குடைவரை கோவில், 9.சேத்துப்பட்டு வெள்ளை மகால். இந்த 3 நாள் விடுமுறைல இங்கு போயிட்டு வாங்க. கட்டாயம் பகிருங்கள்*

News August 15, 2025

சிறுமி வன்கொடுமை; வாலிபருக்கு சாகும் வரை சிறை

image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை சேர்ந்தவர் அரவிந்த்(20). இவர் கடந்த 7.3.2020அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று அந்த மனித மிருகத்திற்கு வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து, தி.மலை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!