News March 21, 2025

தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டம்

image

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக நாளை (மார்ச் 22) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர், அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று முதல்வர்கள், மாநில கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து கடிதத்தை வழங்கி அழைப்பு விடுத்தனர்.

Similar News

News March 31, 2025

83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்

image

சென்னை மாநகராட்சி பகுதியில் கொட்டப்படும் திடக்கழிவுகளால் நீர்வழிப்பாதைகள், நடைபாதைகள் உள்ளிட்டவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், மழைக் காலங்களில் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டுக் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியது. மாநகராட்சி பகுதியில் கடந்த 3 மாதத்தில் 83,394 டன் கட்டடக் கழிவுகள் அகற்றபட்டுள்ளதாக ஆணையர் குமரகுருபன் தெரிவித்துள்ளார்.

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <>ஷேர் பண்ணுங்க<<>>

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!