News March 21, 2025
பண்ணாரியம்மன் கதை தெரியுமா மக்களே?

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் உள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். அக்காலத்தில், அங்கு மேய்க்கப்படும் காராம்பசு ஒன்று தினந்தோறும் பாலை ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்கள் சூழ்ந்த சுயம்பு லிங்கத் திருவுருவம் மீது தன்னிச்சையாக சுரந்துள்ளது. அப்போது அங்கிருந்த ஒருவருக்கு தெய்வ அருள் வந்து பண்ணாரி அம்மன் அங்கு இருப்பதாக வாக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. (ஷேர்)
Similar News
News September 20, 2025
அந்தியூர் பள்ளி கட்டிடம் CM ஸ்டாலின் திறந்து வைப்பு!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பிரம்மதேசம் ஊராட்சி அ செம்புளிச்சாம் பாளையம்அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 224.4லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 10 கூடுதல் வகுப்பறை 2 அறிவியல் ஆய்வக கட்டிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் . தனைதொடர்ந்து எம்எல்ஏ ஏஜி வெங்கடாஜலம் குத்துவிளக்கேற்றி வைத்து பள்ளியில் சிறப்பு உரையாற்றினார்.
News September 20, 2025
ஈரோட்டில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள 160 Technical Officer – பணியிடங்களை நிரப்படவுள்ளது.சம்பளமாக ரூ.31,000 வழங்கப்படும். இதற்கு B.E./B.Tech படித்தவர்கள் https://www.ecil.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.அருமையான வேலை SHARE பண்ணுங்க!
News September 20, 2025
ஈரோடு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஈரோட்டில் கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு, பொருளாதார ரீதியாக வலுப்பெற, உலர், மற்றும் ஈர மாவு அரைக்கும் வணிக ரீதியிலானை இயந்திரங்கள் வாங்க, மொத்த விலையில் ரூ.50% (அ) அதிகபட்சமாக ரூ.5000 மானியமாக வழங்கப்படும். 25 வயதுக்கு மேற்பட்டோர், பிறப்பு சான்று, வருமான சான்றுகளுடன், வரும் 30ம் தேதிக்குள் ஈரோடு ஆட்சியர் அலுவலக, சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.