News March 21, 2025
IPL 2025: முதல் போட்டிக்கு மழை அச்சுறுத்தல்

IPL 2025 போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், முதல் போட்டியிலேயே ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்திக்கும் நிலை உள்ளது. KKR – RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை அங்கு கனமழை பெய்ய 90% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒருவேளை மழையால் நாளை போட்டி முழுவதும் ரத்தானால், இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்துகொள்ளும்.
Similar News
News March 31, 2025
SRH குற்றச்சாட்டுகளுக்கு HCA ரியாக்ஷன்

<<15944222>>SRH<<>> மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனின் (HCA) நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் தவறான தகவல்களைப் பரப்புவதாக HCA குற்றஞ்சாட்டியுள்ளது. SRH நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்த மெயிலும் வரவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. SRH-யிடம் இலவச டிக்கெட் கேட்டு HCA மிரட்டுவதாக செய்திகள் வெளியாகின.
News March 31, 2025
ஆயுதங்களை கீழே இறக்கினால் தான் அமைதி: நெதன்யாகு

பணயக் கைதிகளை விடுவித்து ஆயுதத்தை கீழே இறக்கினால்தான், போர்நிறுத்த உடன்பாடு குறித்து பரிசீலிக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். டிரம்பின் திட்டத்தை செயல்படுத்த ஹமாஸ் அமைப்பு காசாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். கத்தார், எகிப்து மத்தியஸ்தம் செய்து வைத்த போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் தெரிவித்த நிலையில், நெதன்யாகு இவ்வாறு கூறியுள்ளார்.
News March 31, 2025
‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட்

பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கியுள்ளது. தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மேலும், ஃபகத் பாசில், அசோக் செல்வன், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கின்றனர். கோல்டன் ரேயோம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2022 சர்வதேச கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது.