News March 21, 2025
புதுச்சேரி அரசு சார்பில் 20 லிட்டர் தண்ணீர் இலவசம்

புதுவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ”புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2025
புதுச்சேரி ஆளுநர் ரமலான் வாழ்த்துச் செய்தி

புனித ரமலான் நோன்பு சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ, உணர்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டுகிறது.ரமலான் நோன்பின் பயனாக அனைவரது வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் இறைவன் அருள் புரியட்டும் என புதுவையில் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும அனைவருக்கும் ஆளுநர் மனமார்ந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
News March 31, 2025
நவபாஷாண சித்தர் கோயிலில் திருவாசக முற்றோதல்

வில்லியனூரை அடுத்துள்ள சந்தி குப்பத்தில் அமைந்துள்ள சத்குரு நவபாஷாண சித்தர் ஆலயத்தில் சிவனடியார்கள் திருவாசக முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியினை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் மருதமலை அப்பன் சிறப்பாக செய்திருந்தனர். முற்றோதல் நிகழ்ச்சி முடிந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஊர் பொதுமக்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
News March 30, 2025
புதுவை முதலமைச்சரின் ரமலான் வாழ்த்து செய்தி

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், ரமலானின் மறைபொருளானது, நோன்புடன் தீவிர பக்தியில் ஈடுபடுவதையும், மனத்தூய்மை, பொறுமை, சுய ஒழுக்கத்தைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நோன்பின் பிரார்த்தனைகள், உங்கள் வாழ்வில் அன்பு, சகோதரத்துவம், ஈகை, வலிமை மற்றும் வளமான வாழ்வைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அனைவருக்கும் எனது அன்பான ரமலான் நல்வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்