News March 21, 2025

80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

image

சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.

Similar News

News September 9, 2025

2029-ல் ராகுல் காந்தி தான் PM: டி.கே.சிவக்குமார் உறுதி

image

2029-ல் ராகுல் காந்தி கண்டிப்பாக பிரதமர் ஆவார் என கர்நாடகா DCM டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம் நாட்டிற்கு ஒரு மாற்றம் வேண்டும் எனவும், நமது அண்டை நாடுகள் எல்லாம் எதிரிகள் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுலை முதன்முதலாக CM ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். சமீபத்தில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், 2029-ல் ராகுல் PM ஆவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

News September 9, 2025

விஜய்காந்த் வீட்டில் துயரம்.. இபிஎஸ் உருக்கமாக இரங்கல்

image

விஜயகாந்தின் மூத்த சகோதரியான டாக்டர் விஜயலட்சுமி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என்று EPS வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

பிரதமரை வீட்டுக்கு அனுப்பிய #NepoKid ஹாஷ்டேக்

image

நேபாளத்தில் நடந்துவரும் <<17657502>>போராட்டத்தின்<<>> உந்து சக்தியாக இருப்பது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் #NepoKid, #NepoBabies, #PoliticiansNepoBaby போன்ற ஹாஷ்டேக்ஸ் தான். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் குழந்தைகள் வசதியாக வெளிநாட்டுக்கு சென்றுபடித்து செட்டில் ஆகிவிடுவதாகவும், நாட்டில் உள்ள சாதாரண மக்களின் பிள்ளைகள் இங்கு படித்துவிட்டு வேலைக் கிடைக்காமல் வாடுவதாகவும் அந்த ஹேஷ்டேக்குகளில் பதிவுகள் வைரலாகின.

error: Content is protected !!