News March 21, 2025
80 நாள்களில் 113 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் பிஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் நடந்த இரு வேறு என்கவுன்ட்டர்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து கடந்த 80 நாளில் மட்டும் 113 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பிஜப்பூரில் மட்டும் 91 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நக்சல் இல்லாத நாட்டை உருவாக்கும் முயற்சியில் நமது படை வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்று வருகின்றனர் என அமித் ஷா பாராட்டியுள்ளார்.
Similar News
News March 31, 2025
வாழ்வை சிறப்பாகும் 20-20-20 Rule தெரியுமா?

காலை எழுந்ததும் முதல் 1 மணி 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையே மாற்றும் என்கின்றார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். 2வது 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்?
News March 31, 2025
இதுவல்லவோ உண்மையான வெற்றி! ❤️❤️

CSKக்கு எதிரான நேற்றைய போட்டியில் RR மெகா வெற்றியை பதிவு செய்தது. ரியான் பராக் கேப்டன்சியில் பெரும் முதல் வெற்றியும் இதுதான். இந்த சூழலில், சிறுவயது பராக், தோனியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்த ஒருவரின் அணியை வீழ்த்துவதை விட உண்மையான வெற்றி என்ன இருந்துவிட போகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News March 31, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக புதிய நெருக்கடி?

ஏப்.6-ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை சந்திக்க இபிஎஸ்க்கு BJP நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட OPS,TTV, சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும், அண்ணாமலை தலைமையிலான பாஜகவை ஏற்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். இதனால், தனது நலன் விரும்பிகளுடன் விரைவில் ஆசோசனை நடத்த EPS திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?